உலகிலேயே வசதிபடைத்த நாடு எது என்று கேள்வி பள்ளி மாணவர்களிடம் கேள்வி கேட்டாலும் அது அமெரிக்கா என்ற பதில் உடனே வரும். ஆனால் அது வெறும் வெளித்தோற்றத்தில் மட்டுமே! பொருளாதார ரீதியாக பார்த்தால் அது வெறும் ஏமாற்று வேலை. உண்மையில் பணக்காரர்கள் இந்தியர்கள் தான்! இதனை கேட்டால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் உண்மை இது தான்
அமெரிக்காவை பொறுத்தவரை நாடு தான் பணக்கார நாடு. ஆனால் மக்களோ ஓட்டாண்டி மக்கள். வரும் வருமானத்தை விடவும் கூடுதலாக கையிருப்பும், முதலீடும் கொண்ட நாடு அமெரிக்கா. எனினும் அந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கடனாளிகள் தான். ஒவ்வொருவரும் செலவுக்காக பல ஆயிரம் ரூபாயை கடன் பெற்றுள்ளவர்கள். இந்த கடனை கட்ட முடியாமல் நிற்பவர்கள். அவர்களது கடன் சுமையால் தான் பொருளாதார மந்தநிலை என்ற பூதமே உலகை பதம் பார்த்தது.
பொருளாதார மந்தநிலையால் கடந்த 2008ம் ஆண்டு அனைத்த நாடுகளுக்கும் போதாத காலமாகவே அமைந்தது. அமெரிக்காவின் லேமென் பிரதர்ஸ் வங்கி திவாலானதை தொடர்ந்து அந்நாட்டில் 250க்கும் மேற்பட்ட வங்கிகள் திவாலாகின. ஜவுளி, தோல், சுற்றுலா, தகவல்தொழில்நுட்பம்,ஆட்டோமொபைல் நிதி சேவை, உள்கட்டமைப்பு என அனைத்து துறைகளுமே பாதிக்கப்பட்டன. ஏற்றுமதி குறைந்ததால் உற்பத்தி வீழ்ச்சியடைந்து பாதிப்பு ஏற்பட்டது.
பல்வேறு நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் பொருளாதார மந்தநிலையின் பாதிப்புகள் தற்போது விலகி வருகிறது. இருந்தாலும், அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலையின் பாதிப்பு தொடர்கிறது. நிதிசேவை நிறுவனங்கள் தொடங்கி, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரை அனைத்தும் முழுமையாக பாதிப்பில் இருந்து விலக வில்லை. ஒரளவு ஆர்டர்கள் கிடைத்து வருகின்ற போதிலும், உற்பத்தி சீரடைய வில்லை. உற்பத்தி, முதலீடு, வளர்ச்சி, ஏற்றுமதி என அனைத்து துறைகளிலும் இன்னமும் பாதிப்பு தொடர்கிறது.
பொருளாதார பாதிப்பால் அமெரிக்காவில் தான் அதிகம் பேர் வேலையிழந்தனர். பல முன்னணி நிறுவனங்கள் திவாலானதாலும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர். பல மாதங்களாக வேலையில்லாமல் திண்ணாடி வருகின்றனர். வேலையில் இருப்பவர்களின் சம்பளம் கூட கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத பல அமெரிக்கர்கள் மனநோயாளிகளாக மாறி வருகின்றனர். இதற்கு அடிப்படை காரணம் அமெரிக்கர்களின் நுகர்வு கலாச்சாரம் தான்.
அமெரிக்கர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அதனை முழுமையாக செலவு செய்பவர்கள். வருமானத்தை மீறி கடன் வாங்கியும் செலவு செய்பவர்கள். உதாரணத்திற்கு ஒரு அமெரிக்கர் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கூட அவர்கள் ஒன்றை லட்சம் ரூபாய் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்கின்றனர். விளைவு மாதம் தோறும் கடனம் சுமை மட்டும் கூடிக் கொண்டே செல்கிறது.
நுகர்வு கலாச்சாரம் அதிகரித்து பொருட்கள் அதிகம் விற்பனையாகி பொருளாதாரம் பெருகும் என கருதி அந்நாட்டு அரசே இதனை ஊக்குவித்தது. அமெரிக்கர்கள் அதிகம் செலவாளியாக இருந்தால் பொருளாதாரம் உயரும் என்பது அமெரிக்காவின் அசைக்க முடியாத நம்பிக்கை. இது ஒரு விதத்தில் உண்மை என்பதால் தான் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த நுகர்வு கலாச்சாரம் காரணமாக இருக்கிறது.
அதாவது மக்களை கடனாளியாக்கி தனது பொருளாதாரத்தை வளமாக்குகிறது அமெரிக்கா. ஆனால் இது தவறான கருத்து என்பதை அமெரிக்கா காலம் கடந்து உணர்ந்து வருகிறது. பொருளாதார மந்தநிலையின் பாதிப்புக்கு பிறகு இந்த உண்மையை சரியாக புரிந்து கொண்டு விட்டது அமெரிக்கா. இந்த நுகர்வு கலாச்சாரம்! நீண்ட காலத்திற்கு மக்களை மட்டுமின்றி தங்கள் தேசத்தையும், ஏன் நம்பியிருக்கும் மற்ற நாடுகளையும் படு குழியில் தள்ளி விடும் என்பததை அமெரிக்கா உ<ண்ர்ந்து விட்டது. மக்கள் வீழ்ந்து! நாடு நன்றாக இருந்தால் பயனல்ல என்பது அமெரிக்காவுக்கு உரைத்து விட்டது.
இப்போதோ தனது குடிமக்களை, செலவை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகிறது அமெரிக்கா. இருப்பினும் செலவு செய்தே பழக்கப்பட்டு விட்ட அமெரிக்கர்களுக்கு செலவை குறைத்துக் கொள்வது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. பழக்கத்தை உடனடியாக மாற்றிக் கொள்ள முடியாது அல்லவா! அமெரிக்க மக்கள் மாற இன்னும் காலம் பிடிக்கத்தான் செய்யும்!
No comments:
Post a Comment