சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் குறித்து தற்போது ஆராய்ச்சிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகிறன. அமெரிக்கா மட்டுமின்றி ஜப்பான், பிரான்ஸ், சீனா, தென்கொரியா என பல நாடுகளும் இந்த ஆராய்ச்சியில் தற்போது தீவிரம் காட்டி வருகின்றன.
ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்தியர்கள் வானசாஸ்திரத்திலும், விண்வெளி ஆராய்ச்சியிலும் பெரும் சாதனைகள் கண்டுள்ளனர். பாஸ்கராச்சாரியரின் காலம் முதல் கடந்த நூற்றாண்டு வரை விண்வெளி ஆய்வில் நாம் செய்துள்ள சாதனைகள் மகத்தானவை. இப்போது மேலை நாடுகள் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் அனைத்துமே நம் ஏற்கனவே ஆய்வு செய்து கூறியுள்ளதை உறுதி செய்வதாகவே அமைகின்றன.
சூரிய மண்டலத்தில் பூமியை தவிர பல்வேறு கோள்களின் நி லைபாடுகளையும், அதன் தன்மையையும் குறித்து பல்வேறு ஆய்வகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக செய்வாய் கிரகம் குறித்தும், சந்திரன் குறித்தும் அதிகபடியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா இதுகுறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.
பூமியை தவிர வேறு எந்த கிரகமும் மனிதன் வாழ தகுதியான வகையில் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் செவ்வாய் கிரகத்திலும், சந்திரனிலும் தண்ணீர் இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் இருப்பதால் அங்கு உயிரினங்கள் வாழ தகுதி இருக்கிறதா என ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம சந்திரா யன் விண்கலத்தை அனுப்பி நடத்திய ஆய்விலும் சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு பாறைகள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே அடுத்தகட்டமாக அங்குள்ள தண்ணீர் குறித்து ஆய்வுளை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்
இதுபோலவே செவ்வாய் மற்றும் சந்திரன் தவிர வேறு சில கிரகங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,.சனிக்கிரகத்தில் ரசாயனப் பொருட்கள் இருப்பதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கூறியுள்ளது. குறிப்பாக அந்த ரசாயனப் பொருள் கச்சா எண்ணெய் போல் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
இந்த ரசாயனப் பொருட்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது இன்னுமும் தெரிய வில்லை. அதேசமயம் இவற்றின் சில தன்மைகள் கச்சா எண்ணெயை ஒத்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனினும் முழு அளவிலான ஆய்வுக்கு பிறகே இதுகுறித்து எதுவும் கூற முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சனிக்கிரகம் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.
இதுபோலவே செவ்வாய் கிரகத்தில் இயற்கையான மீத்தேன் இருப்பதாக கனடா ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இயற்கையாக உருவாகும் இந்த மீதேன் பாக்ட்ரீயாக்களில் இருந்து வெளிபடுகிறது. செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரிகள் இருப்பது தெரிகிறது. எனவே செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளது. தண்ணீர் இருப்பது ஏற்கனவே உறுதியாகியுள்ள நிலையில், உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வுகள் எல்லாம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டு இருந்தாலும் மற்ற கிரகத்தில் மனிதன் வாழ சாத்திய கூறுகள் இருப்பதாக மட்டுமே கூறப்படுகிறது. ஆனால் பூமி பந்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் மனிதன் வாழ மாற்று கிரகம் எப்போது கிடைக்கும் என்பது மட்டும் விடை தெரியாத பதிலாகவே உள்ளது.
No comments:
Post a Comment