Monday, August 23, 2010

செலவில்லாமல் மின்சாரம்! வழிகாட்டுகிறது ஜப்பான்

மின்சக்தியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வழக்கமான முறையில் தயாரிக்கப்படும் நீர், அணு, அனல் மின்சாரம் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. எனவே மின்சாரத்தின் தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மரபுசாரா மாற்று எரிசக்தி முறைகளை கண்டறிவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. காற்றாலை மூலம் மின்சாரம், கழிவு பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது என பல மரபு சாரா முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்து வரும் நிலையில் அதன் கையிருப்பு குறைந்து வருவதால் அதன் விலைஅதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய்க்காக ஒவ்வொரு நாடும் பல கோடி ரூபாய் செலவிடுகிறது. ஆனால் மாற்று எரிபொருள் கண்டு பிடிக்கப்பட வில்லை. மின்சாரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தியால் பெரும் செலவு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பபை சரி செய்வது என்பது இமாலய பணியாக உருவெடுத்துள்ளது.
ஆனால் மின்சாரம் மற்றும் வாகன எரிபொருளுக்கான செலவை பல மடங்கு குறைப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஹைட்ரஜனை பயன்படுத்தி எரிசக்தி தயாரிக்கும் முறையை ஜப்பான் பிரபலமடையச் செய்து வருகிறது. ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து 950 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தள்ள புக்குவோகா நகர் முழுவதும் இயற்கையான எரிபொருளால் மட்டுமே இயங்குகிறது. ஜப்பான் அரசின் உதவியுடன், நிப்பான் எண்ணெய் நிறுவனம் மற்றும் நிப்பான் இரும்பு நிறுவனம் ஆகிய இரண்டும் இந்த சாதனையை படைத்துள்ளது.
அந்த நகரத்திற்கு தேவைப்படும் மொத்த மின்சாரமும், வாகனங்கக்கு தேவைப்படும் எரிபொருளும் ஹைட்ரஜன் சத்தியின் மூலமே பெறப்படுகிறது. தண்ணீரை மிக உயரிய வெப்பத்தில் சூடாக்குவதன் மூலம், ஹைட்ரஜனை ஆவியாக்கி வாயுவாக மாற்றுவதன் மூலம் அதில் இருந்து மின்சாரமும், எரிபொருளும் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு மின்சாரம் தயாரிக்க மிக குறைந்த அளவு மட்டுமே செலவாகிறது. அத்துடன் ஒரு முறைமட்டுமே செலவும் செய்யப்படுகிறது.
எனவே மிக மிக குறைந்த விலையில் மின்சாரம் மற்றும் வாகன எரிபொருள் தயாரிக்க முடிகிறது. இதனால் எரிபொருள் உற்பத்தி செலவு வெகுவாக குறைவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அந்த நகரம் முழுவதுமே பசுமை நகரமாக காட்சியளிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு பாதுகாப்பாகவும் விளங்குகிறது.
----------------------------

No comments:

Post a Comment