Monday, August 23, 2010

சர்க்கரை நோயாளிகளுக்கு சுகர்பீரி மாம்பழங்கள்

நமது மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு எதனை வைத்து மார்க்கெட்டிங் செய்யலாம் என்பது அத்துபடி. மாம்பழத்தை சாப்பிட யாருமே ஆசைப்படுவார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகளால் மாம்பழங்களை சாப்பிட முடியாது. அவர்களுக்கு மாம்பழங்களை விளைவித்து விட்டனர் நமது விஞ்ஞானிகள்.
உத்தரபிரதேச மாநிலம் மலிகாபாத் மாம்பழங்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இடம். ஆந்திர மாநிலம் பங்கனப்பள்ளியை போலவே மலிகாபாத் மாம்பழங்களும் பெயர் பெற்றவை. அங்குள்ள மாம்பழ தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளாக நடத்திய ஆராய்ச்சியில் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வண்ணம் சத்து மிக்க அதேசமயம் குறைந்த சர்க்கர கொண்ட மாம்பழ வகையை உருவாக்கியுள்ளது.
இந்த மாம்பழத்தில் வழக்கமான மாம்பழங்களில் உள்ளதைவிடவும் குறைவான சர்க்கரையளவு கொண்டது. மற்ற மாம்பழங்கில் உள்ள சர்க்கரையளவில் 25% மட்டுமே இதில் சர்க்கரை கலந்துள்ளது. இதனால் சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி இதனை உட்கொள்ள முடியும். சர்க்கரை மட்டுமின்றி கார்போஹைட்ரேட்டும் இந்த மாம்பழங்களில் குறைவாக உள்ளது. இதனால் இந்த வகை மாம்பழங்களை சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. மாறாக மாம்பழத்தில் உள்ள மினரல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன.
சோதனை அடிபடையில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மா வகை மலிதாபாத்தில் தற்போது குறைவான இடத்தில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. எனவே இந்த வகை மாம்பழத்தில் விலையும் சற்று அதிகமாகவே உள்ளது. இந்த மாம்பழத்தை அதிகஅளவில் பயிரிடும் போது அதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment