Monday, August 23, 2010

கச்சா எண்ணெய் படலம் கடலையே அழித்து விடும்

கச்சா எண்ணெயை பொறுத்தவரை உலகம் முழுவதும் வாகன எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெய் வளத்தை பொருத்தவரை உலகில் சில நாடுகளில் மட்டும் தான் கிடைக்கிறது. இந்த நாடுகளில் இருந்து தான் மற்ற நாடுகள் வாங்குகின்றன. இவ்வாறு வாங்கப்படும் கச்சா எண்ணெய் பெரும்பாலும் கடல் வழியாக தான் கொண்டு வரப்படுகிறது. இதுமட்டுமின்றி சில நாடுகளுக்கு பைப் லைன்கள் மூலமாகவும் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.
இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் போது கச்சா எண்ணெயின் கணிசமான அளவு கடலில் சென்று சேர்கிறது. அதுமட்டுமின்றி கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோலியப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதன் கழிவையும் பெரும்பாலும் கடலில் சென்று சேர்க்கின்றன. பல ஆண்டுகளாக இவ்வாறு சேர்க்கப்படும் கழிவுகள் கடல்பகுதியில் பெரும் படலமாக உருவெடுத்துள்ளது. இந்த கச்சா எண்ணெய் படலத்தால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.அத்துடன் பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் இந்த கச்சா எண்ணெய் படலம் கொடிய ரசாயன விஷமாக மாறியுள்ளது தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கச்சா எண்ணெய் படலம் என்ற இந்த கொடிய ரசாயன விஷத்தால் கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழிந்து வருகின்றன. முக்கிய மீன் இனங்கள், பவளபாறைகள், கடல் பாசிகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. அத்துடன் இயற்கையாக கடல் நீரை சுத்திரிகத்து சுழற்சி செய்யும் இயற்கையின் கொடையும் பாழ்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த கடல்வாழ் ஆராய்ச்சியா ளர்கள் நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
பசிபிக், அண்லாண்டிக், இந்திய பெருங்கடல்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கச்சா எண்ணெய் ரசாயன விஷத்தால் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருவதும், மறு சுழற்சி முறை அழிந்து வருவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மறு சுழற்சி முறை பாதிக்கப்பட்டால் அது பூமிக்கே மிகப்பெரிய பாதிப்பாக அமையும் என்றும் அந்த விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment