மனிதனின் பேராசைக்கு அளவே இருக்காது போலிருக்கிறது. பசுவின் பாலை தனது தேவைக்காக எடுக்கத் தொடங்கிய மனிதன் தனது தேவைக்காகவே கூடுதல் பால் சுரக்கும் பசுக்களை உருவாக்கினான். விஞ்ஞானித்தின் இந்த விபரீதத்தால் இன்று ஒரிஜினல் பசு இனமே இல்லாமல் போய் விட்டது. தனது சுயநலத்திற்காக மனிதன் செய்யும் அட்டகாசம் இவை. மனிதன் உருவாக்கிய விஞ்ஞான பசுவின் பாலும் போதாததால் இப்போது ஆடுகளையும் இதுபோல் பால் தரும் இயந்திரமாக மாற்ற” அவன் முயன்று வருகிறான். இந்த விபரீத ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் ரஷ்ய விஞ்ஞானிகள் .
கூடுதல் பயன் கிடைக்கும் வண்ணம் தாவங்களையும், உயிரினங்களையும் உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. தாவரங்களில் நெல், வாழை, பழங்கள், காய்கறிகள், கரும்பு, பருத்தி என அனைத்தும் மரபணு ம õற்றம் செய்யப்பட்டு அதிக பயன் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. குறைவான சாகுபஐ காலத்தில் அதிக மகசூல் தரும் வண்ணம் இந்த தாவரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அதுபோலவே விலங்கினங்களில் இறைச்சிக்காக கோழி மரபணு மா ற்றம் செய்யப்பட்டு பிராய்லர் கோழி உருவாக்கப்பட்டுள்ளது. மாடுகளிலும் அதிக பால் தரக்கூடிய வகையில் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாடுகள் வழக்கமான மாடுகள் தரும் பாலின் அளவை விடவும் பல மடங்கு அதிகம் பால் தருகின்றன.
எனினும் சில வகை உயிரினங்களில் மரபணு மாற்றம் செய்வது இயலாத காரியமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆட்டின் இறைச்சி அதிகஅளவில் உட்கொள்ளப்படுவதால் அதற்கு பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் அதனை ஈடுகட்டும் வகையில் பிராய்லர் கோழிகளை போல மரபணு மாற்றம் செய்ய முடிய வில்லை. ஆனால் அதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.
மாடுளை போலவே மனிதர்களுக்கு தேவையான பாலை பெறும் வண்ணம் ஆடுகளை மரபணு மாற்றம் செய்யும் முயற்சியில் ரஷ்ய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். பசும் பாலை போலவே வெள்ளாட்டின் பாலும் மனிதர்கள் குடிப்பதற்கு தகுந்தவாறு இருப்பதால் குட்டிக்கு தேவைப்படும் பால் போக கூடுதலாக பல மடங்கு பாலை சுரக்கும் வண்ணம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளாடுகள் இரண்டை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அதிகஅளவு பால் கொடுக்கும் வண்ணம் மட்டுமின்றி மனிதர்களுக்கு தேவையான பாலை உருவாக்கும் வண்ணமும் இவை மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் உட்கொள்ளும் பாலில் இருப்பது போன்றே புரோட்டீன் அதிகமாகவும், கால்சியம், கொழுப்புச் சத்து நிறைந்ததாகவும் இந்த பால் காணப்படுகிறது. ஆனால் இந்த விபரீத ஆராய்ச்சியால் ஆடுகள் இனமும் அழிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment