நேரமின்மை காரணமாகவும், குடும்பத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்குச் செல்வதால் சமையல் என்பது கடினமான ஒன்றாக மாறி வருகிறது. இதன் காரணமாக தான் தற்போது சமையல் செய்வதற்கு நேரமும் இல்லாமல், பயிற்சியும் இல்லாமல் போய் விடுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு உணவு பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக சமையலுக்கு தேவையான மசாலா பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் தயாரிப்பது மட்டுமின்றி நேரடியாகவே உணவு பொருட்களையும் தயாரித்து வருகின்றன. சிப்ஸ், ஊறுகாய், குளம்பு வகைகள், சப்பாத்தி, போன்றவற்றை நேரடியாக நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
அத்துடன் மாவு, ஜூஸ் உள்ளிட்டவையும் பெரும் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் சூப்புகள் இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. வெஜிடபிள் சூப், தக்காளி சூப் மற்றும் அசைவ வகை சூப்புளும் ரெடிமேடாக தயாரிக்கப்படுகின்றன. பிரபல நிறுவனங்கள் தயாரித்து வரும் இந்த சூப் வகைகள் பெருமளவு விற்பனையாகின்றன. குறிப்பாக தக்காளி சூப் அதிகஅளவில் விற்பனையாகி வருகிறது.
ஆனால் இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் சூப்களில் இயற்கையான பொருட்களின் எந்தவித சத்துக்களும் இருப்பதில்லை. மாறாக ரசாயன பொருட்களை பயன்படுத்தியே இந்த சூப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இயற்கையான சத்துக்கள் கிடைக்காதது மட்டுமின்றி இந்த வகை ரசாயனப் பொருட்களால் உடல் நலமும் கெட்டுப்போகிறது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இயங்கும் நுகர்வோர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நாட்டில் மிகபெரிய அளவில் விற்கப்படும் 11 நிறுவனங்களின் ரெடிமேட் தக்காளி சூப்களின் தன்மை குறித்து ஆய்வு செய்துள்ளது. அந்த சூப்புகளில் தக்காளியில் உள்ள எந்தவித சத்துக்களும் இல்லை என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில், அதுவும் 10% அளவிற்கு மட்டுமே தக்காளியின் சத்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தக்காளி சூப்புகளில் லைசோபோன், சோடியம் மற்றும் சர்க்கரை ஆகியவை மட்டுமே உள்ளன. இவற்றில் லைசோபோன் சிகப்பு கலர் கிடைப்பதற்காக செயற்கையாக பயன்படுத்தப்படும் கலரூட்டி. இந்த கலரூட்டி இயற்கையாக தர்பூசணி போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இவை மட்டும் உடலுக்கு நல்லதை விளைவிக்கிறது.
ஆனால் பிரபல நிறுவனங்களின் தயாரிப்பான தக்காளி சூப்பில் இந்த லைசோபோன் மிக குறைவான அளவே உள்ளது. ஒரே ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் மட்டும் 10% அளவிற்கு லைசோபோன் உள்ளது. ஆனால் அதற்கு மாறாக சோடியம் அதிகஅளவில் இந்த சூப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. பிரிட்டன் போன்ற நாடுகளில் கூட தக்காளி சூப்புகளில் 100 கிராம் தக்காளி சூப்பில் சோடியம் 300 மைக்ரோ கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரபல நிறுவனங்களின் 100 கிராம் தக்காளி சூப்புகளில் 7 ஆயிரத்து 37 மைக்கேரா கிராம் அளவிற்கு சோடியம் சேர்ககப்படுகிறது. இதற்கு அடுத்த படியாக சர்க்கரையே மிக அதிகஅளுவில் இவற்றில் சேர்க்கப்படுகிறது. இவை 100 கிராமுக்கு 30 கிராம் என்ற அளவில் சேர்க்கப்படுகிறது. இத்துடன் தக்காளி சூப் கெட்டுபோகாமல் இருக்க பெருமளவில் பதப்படுத்தும் பிரிசர்வேட்டீஸ் சேர்க்கப்படுகின்றன.
No comments:
Post a Comment