Monday, August 23, 2010

அதிகம் செல்போன் பேசுபவர்களா? உங்கள் காது டமார் தான்


அறிவியல் வளர்ச்சியின் அற்புதமான கண்டுபிடிப்பான தொலைபேசியின் புதிய அவதாரம் செல்போன்களாகும். செல்போன் இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது. உடன் யாராவது இருக்கிறார்களாக இல்லையா என்பதை விட செல்போன் இருப்பது அவசியமாகி போனது. கழிவறைக்கு கூட செல்போனுடன் செல்பவர்கள் இன்று அதிகம்.
எனினும் எந்த ஒரு தொழில்நுட்பத்தாலும், வசதி எந்தஅளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பாதிப்பும் இருக்கவே செய்கிறது. அந்தவகையில் செல்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு ஒலி அலைகளால் பெருமளவு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒலி அலைகள் நேரடியாக மூளையை தாக்குவதால் அதன் செயல்பாடுகளும், வளர்ச்சியும் முடங்கிப்போவதாக கூறப்படுகிறது.
எனவே செல்போன் மூலம் பேசுவதை கூடிய அளவில் குறைத்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தைகளுக்கு செல்போன்களை பழக்குவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். கருவுற்ற பெண்கள் செல்போன்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
செல்போன்களில் இருந்து வெளி வரும் ஒலி அலைகள் நேரடியாக மூளையைச் சென்று தாக்கவல்லது. அதுமட்டுமின்றி அந்த ஒலி அலைகள் கருவுற்றிக்கும் குழந்தைகளையும் பாதிப்படை செய்யும். குழந்தையின் வளர்ச்சி, அதன் மன அமைதி போன்றவை பாதிக்க வாய்ப்பு உள்ளது. செல்போன்களில் இருந்து வரும் கதிர்களால் மூளையில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மூளையின் செயல்திறன் குறைவதால் மன வளர்ச்சி கூட பாதிக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமன்றி சிந்திக்கும் திறனும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
செல்போன் டவர்களால் மனிதர்களுக்கு பெரும் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த டவர்களை சுற்றியுள்ள சில கிலோ மீட்டர் தொலைவுக்கும் கூட கதிர்களின் வீச்சு உள்ளது. இதனால் தான் நகர்புறங்களில் குருவிகள் இனமே அழிந்து விட்டது.
குருவிகள் மட்டுமின்றி வேறு சில பறவை செல்போன்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முதன் முறையாக நாடுமுழுவதும் விரிவானஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் செல்போன்கள் பயன்படுத்துவதால் தனி மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து லண்டனில் இருந்து வெளியாகும் மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், செல்போன்களின் பாதிப்பால் உலகம் முழுவதும் பலருக்கு காது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செல்போன் பயன்படுத்துபவர்களில் 70% பேருக்கு சாதாரண அளவில் காது தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து 4 ஆண்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு காதில் சத்தம் கேட்டல், அவ்வப்போது வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
செல்போன்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு சில பரிரிந்துரைகளும் அந்த இதழில் வெளியிடப்பட்டுள்ளது. செல்போன்களை ஒரே காதில் பயன்படுத்தாமல் மாற்றி, மாற்றி பயன்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியான பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியம். அதே போன்று தொடர்ச்சியாக சில மணிநேரங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு கொஞ்சம் கொஞ்சமமாக பேசுவதன் மூலம் காது பாதிப்படைவதை தடுக்க முடியும் என்றும் அந்த இதழ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment